Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான்-2 அனுப்பிய முதல் தகவல்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (08:39 IST)
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விஞ்ஞானிகள் நேற்று அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார் 
 
நேற்று மதியம் சரியாக 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் 16 நிமிடங்களில் மிகச்சரியாக புவி வட்டப்பாதையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் நிலை நிறுத்தியது என்றும் விண்வெளி துறையில் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பலகட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு 48 நாட்களில் சந்திரனின் தென்துருவத்தில் சந்திராயன்-2 மெதுவான வேகத்தில் தரையிறங்கும் என்றும், சந்திராயன் விண்கலம் செயல்படத் தொடங்கி விட்டதாகவும், இந்த விண்கலம் தற்போது தகவல்களை அனுப்பி வருவதாகவும், சந்திரனைப் பற்றிய தகவலை முழு தகவல்களையும் பெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்
 
சந்திராயன் - 2 விண்கலம் அனுப்பிய முதல் தகவல் குறித்து அவர் மேலும் விளக்கமாக தெரிவிக்கவில்லை எனினும் இது குறித்து விரிவாக அவர் இன்னும் ஒரு சில நாட்களில் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments