Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான்-2 அனுப்பிய முதல் தகவல்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (08:39 IST)
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விஞ்ஞானிகள் நேற்று அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார் 
 
நேற்று மதியம் சரியாக 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் 16 நிமிடங்களில் மிகச்சரியாக புவி வட்டப்பாதையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் நிலை நிறுத்தியது என்றும் விண்வெளி துறையில் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பலகட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு 48 நாட்களில் சந்திரனின் தென்துருவத்தில் சந்திராயன்-2 மெதுவான வேகத்தில் தரையிறங்கும் என்றும், சந்திராயன் விண்கலம் செயல்படத் தொடங்கி விட்டதாகவும், இந்த விண்கலம் தற்போது தகவல்களை அனுப்பி வருவதாகவும், சந்திரனைப் பற்றிய தகவலை முழு தகவல்களையும் பெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்
 
சந்திராயன் - 2 விண்கலம் அனுப்பிய முதல் தகவல் குறித்து அவர் மேலும் விளக்கமாக தெரிவிக்கவில்லை எனினும் இது குறித்து விரிவாக அவர் இன்னும் ஒரு சில நாட்களில் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments