Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான் 2..இஸ்ரோ அறிவிப்பு

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (18:52 IST)
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலமான சந்திரயான்-2, இன்று வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் குறிப்பிட்ட இலக்கில் ராக்கெட், சந்திரயான்-2 விண்கலத்தை சேர்த்தது.

ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியைச் சுற்றி வந்தது. இதன் பின்னர் கடந்த புதன் கிழமை மதியம் 2.52 மணியளவில் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முதலாக உயர்த்தப்பட்டது. அதாவது பூமிக்கு அருகே, குறைந்த பட்சமாக 230 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,163 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றி வரும் வகையில் உயர்த்தப்பட்டது.

இதை தொடர்ந்து சந்திரயான் 2 சுற்றுப்பாதை, கடந்த 26 ஆம் தேதி இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது. தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடியே நேற்று அதிகாலை 1.08 மணியளவில் சிக்னல் மூலம் சந்திரயான் -2 விண்கலத்தில் 71792 உள்ள மோடாரை விஞ்ஞானிகள் 16 நிமிடம் இயக்கினார்கள். இதை தொடர்ந்து இன்று மூன்றாவது முறையாக சுற்றுப்பாதை மேலும் ஒரு படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.

மதியம் 3.12 மணியளவில் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல்கள் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தில் உள்ள மோட்டாரை 989 நிமிடங்களுக்கு விஞ்ஞானிகள் இயக்கினார்கள். தற்போது 71792 கி.மீ நீள்வட்ட பாதையில் சந்திரயான்-2 பூமியைச் சுற்றி வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதனையடுத்து நான்காவது முறையாக ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி மேலும் உயர்த்தப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதில் பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து விலகி, சந்திரனின் சுற்றுவட்டபாதைக்கு சந்திரயான்-2 செல்லும் எனவும் கூறுகின்றனர்.

இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி, சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் எனவும், விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவரும்போது, அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவில் தரை இறங்கும் எனவு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments