சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர்: அடுத்து என்ன? இஸ்ரோ பரபரப்பு தகவல்!

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (15:51 IST)
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் இருப்பதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விக்ரம் லேண்டர் என்ன ஆனது? என்ற பதற்றம் அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. 
 
இந்நிலையில் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் இமேஜில் இருந்து நேற்று விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரை நிலவின் 100 கிமீ சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50 கிமீ தூரமாக குறைத்து விக்ரம் லேண்டரை பற்றிய தகவலை பெற இஸ்ரோ திட்டமிட்டது. 
அதன்படி, தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர் உடையவில்லை. ஆனால், லேசாக சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
அதோடு, நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments