Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 25 February 2025
webdunia

சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு மே 20 வரை காவல் நீட்டிப்பு..!

Advertiesment
Kavitha

Senthil Velan

, புதன், 15 மே 2024 (08:36 IST)
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மாநில மேலவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் அடைக்கப்பட்டுள்ளார்.
 
அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், அமலாக்கத்துறை அதிகாரிகள், காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை நடைபெற்று வருவதால், கவிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிபதியை கேட்டுக்கொண்டனர். 

 
மேலும், இவ்வழக்கு தொடர்பாக 8000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை குறித்து வரும் 20-ம் தேதி தெரிவிப்பதாகவும், அது வரை கவிதாவுக்கு நீதிமன்ற காவலை நீட்டிப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டுமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு..! தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்..!