Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி மாநிலம் கிடைத்ததால் வைரமூக்குத்தி காணிக்கை செலுத்திய முதல்வர்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (08:12 IST)
ஆந்திரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா என்ற மாநிலம் பிரிந்தது. இந்த புதிய மாநிலத்திற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் பல ஆண்டுகளாக போராடினார். தெலுங்கானா என்ற தனி மாநிலம் அமைந்தால் பல கடவுள்களுக்கு காணிக்கை செலுத்துவதாகவும் இம்மாநிலத்தின் முதல் முதல்வர் சந்திரசேகரராவ் வேண்டுதல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில் தனது வேண்டுதல்கள் ஒவ்வொன்றாக சந்திரசேகரராவ் நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே கடந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில், தெலுங்கானாவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் வீரபத்திர சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்குக் அவர் தனது வேண்டுதல்களை நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக வீரபத்திர சுவாமிக்கு சந்திரசேகரராவ் வழங்கிய தங்கமீசை பக்தர்களை பெரிதும் கவர்ந்தது
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கையம்மன் கோயிலுக்கு நேற்று  சென்ற முதலமைச்சர் சந்திரசேகரராவ், அம்மனுக்கு வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கினார். வைர மூக்குத்தியுடன் ஜொலிக்கும் அம்மனை அவர் சில நிமிடங்கள் தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments