Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவை கொல்ல ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு?

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (13:34 IST)
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷாவை கொல்ல முயற்சி செய்ததாக ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா தெரிவித்துள்ளார். 
 
திருப்பதியில் வைத்து அமித்ஷாவை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாக கூறி இதனை கண்டித்து நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதில் ஆந்திர பாஜக தலைவர் பின்வருமாறு பேசினார். சந்திரபாபு நாயுடு அரசை பற்றி யாரேனும் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
 
நாயுடு அரசு எல்லாவகையிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஊழல் விவகாரத்தை எழுத 300 பக்கங்கள் போதாது. திருப்பதி கோயிலில் அமித்ஷா சாமி கும்பிட வந்திருந்தார். அப்போது ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சியினரை வைத்து போராட்டம் நடத்தினார்.
 
அப்போது அமித்ஷாவின் வாகனத்தின் மீது கல் வீசப்பட்டதை அனைவரும் பார்த்தனர். போராட்டம் என்ற பெயரில் அவரை படுகொலை செய்ய சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments