Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தோல்வி எதிரொலி: மீண்டும் கட்சி பெயரை மாற்றும் சந்திரசேகர் ராவ்?

Mahendran
சனி, 13 ஜனவரி 2024 (17:31 IST)
தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை மாற்றிய நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக மீண்டும் பழைய பெயரையே வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி என்ற பெயராக சமீபத்தில் முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றினார். தமது கட்சி மாநில கட்சியாக இல்லாமல் தேசிய கட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயர் மாற்றப்பட்டது.

ஆனால் கட்சியின் பெயர் மாற்றிய பிறகு தான் தெலுங்கானா மாநிலத்தில் அக்கட்சி தோல்வி அடைந்தது என்பதும், சந்திரசேகரராவ் முதலமைச்சர் பதவியையும் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தற்போது மீண்டும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரையே மாற்ற அவரது கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் பெயர் மாற்றத்தை மக்கள் விரும்பவில்லை என்பதால் தான் தோல்வி கிடைத்தது என்று கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிஆர்எஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது சட்டமன்ற தொகுதிக்கு காரணம் என்று கூறப்படுவதால் மீண்டும் தனது கட்சியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்று மாற்ற சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments