Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு போலியானது! – மத்திய அரசு எச்சரிக்கை!

south railway
, புதன், 11 ஜனவரி 2023 (10:19 IST)
ரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் போலியானது என மத்திய ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் அவ்வபோது காலியிடங்கள், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். சமீபத்தில் அவ்வாறான இந்திய ரயில்வேயில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் ரயில்வே பெயரிலேயே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு போலியானது என்றும், யாரும் இதுபோன்று அறிவிப்பு வெளியிட்டு வரும் இணையதள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதான தர்மம் தொடங்கியதே தமிழகத்தில்தான்..! – ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு!