Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் – பான் இணைப்பு: கால அவகாசம் நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (10:10 IST)
ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ல் முடியும் நிலையில் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது.

பிறகு பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்ற கால அவகாசம் டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் காலக்கெடு முடிவடையும் நிலையில் பலர் ஆதான் –பான் எண்ணை இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்த நிலையில் 2020 மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.

வருமானவரி தாக்கல் செய்ய பான் – ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து இரண்டையும் இணைக்கும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments