Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11.48 கோடி பான் கார்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் தகவல்..!

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (08:14 IST)
ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என்பது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பெரும்பாலும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆதார் - பான் கார்டுகள் இணைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பது குறித்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ்  சௌதரி என்பவர் பதில் அளித்துள்ளார். இந்த பதிலில் இன்னும் 11.48 கோடி ஆதார் கார்டுகள் பான் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை சுமார் 602 கோடி ஆதார் - பான் கார்டு இணைப்புக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகள் தொடங்க, பர்சனல் கடன் வாங்க ஆகிய அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை இணைக்கப்பட வேண்டியது அவசியம் என்பதால் இதுவரை இணைக்காதவர்கள் உடனே இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments