Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்குவேன்.. வெய்ட் பண்ணுங்க! – மத்திய அமைச்சர் பதில்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (08:28 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தானும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதலாவதாக இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலில் தடுப்பூசிகளை அரசியல்வாதிகள், அமைச்சர்கள் போட்டு கொள்ள வேண்டும் என எதிர்கட்சியினர் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் “பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் முறை வரும் போது நானும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments