பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜினாமா?

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (13:38 IST)
பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடு முழுவதும் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து மீ டு என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த  பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், பாஜகவின் மூத்த தலைவரும் வெளியுறவுத்துறை இணைஅமைச்சருமான  எம்.ஜெ.அக்பர் மீது பாலியல் புகார் வைத்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் பல பெண் பத்திரிக்கையாளர்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். இதுகுறித்து எந்த பதிலையும் கூறாமல் இருந்தார் அக்பர்.
 
இந்நிலையில் அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், தன் ராஜினாமா கடிதத்தை மெயில் மூலமாக பிரதமர் மோடிக்கு அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்