Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறார்களுக்கு 2வது டோஸ்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (13:05 IST)
15 -18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம். 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் 15 -18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 15-18  வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் 2வது டோஸ் போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 31 முதல் 15-18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments