Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ.பி.எப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்வு

இ.பி.எப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்வு
, வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (20:17 IST)
பி.எப் வட்டி விகிதத்தை 8.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
2015-16ஆம் ஆண்டிற்கான பி.எப் தொகைக்கு 8.8 சதவிகித வட்டி வழங்க வேண்டும் என்று மத்திய வாரியக் குழு, கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மத்திய அரசோ 8.7 சதவீத மட்டுமே வழங்கி ஒப்புதல் அளித்தது. 
 
அதனால், நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. எதிர்கட்சிகளும் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. 
 
இதனால் வேறு வழியின்றி பி.எப் தொகையை 8.8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்: ஐ.நா அறிக்கையில் தகவல்