இந்தியாவை வறுத்தெடுக்கும் வெயில்! – மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு!

Webdunia
திங்கள், 2 மே 2022 (08:42 IST)
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து மக்களை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் “மிதமிஞ்சிய வெப்பத்துக்கு ஏற்ப ஆஸ்பத்திரிகள் வசதிகளை பெருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்கள் இயக்க தடையற்ற மின்சார வினியோகம், சோலார் தகடுகளை நிறுவுதல், உட்புற வெப்பநிலையை குறைக்க குளிரூட்டும் கூரைகள், ஜன்னல் மறைப்புகள் ஆகியவற்றை நிறுவ வேண்டும்.

மேலும் வெப்பத்தால் ஏற்படும் தோல் வியாதிகளை சரிசெய்ய தேவையான மருந்துகள், ஐவி திரவம் உள்ளிட்டவை போதிய அளவில் கையிருப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments