Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரிசோதனையில் நெகட்டிவ், சில நாட்கள் கழித்து பாசிட்டிவ்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

பரிசோதனையில் நெகட்டிவ், சில நாட்கள் கழித்து பாசிட்டிவ்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!
, புதன், 29 டிசம்பர் 2021 (15:36 IST)
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புபவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அதன் பின்னர் சில நாட்கள் கழித்து பாசிட்டிவ் ரிசல்ட் வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து வெளிநாட்டில் இருந்து வருவோர் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பெரும்பாலோனோருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகிறது என்றும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் மற்றவர்களுக்கும் கொரோனாவை பரப்புகின்றனர் என்று டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்
 
எனவே தான் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அவர்கள் ஒரு வாரம் தங்களை தாங்களே தனிமப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது புதுமையான திட்டம், வரவேற்கத்தக்க திட்டம்: முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு!