Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதமான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளில் இருக்கலாம்! – சுகாதாரத்துறை அறிவிப்பு!

National
Webdunia
சனி, 9 மே 2020 (13:20 IST)
கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில் மிதமான அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைகளில் இருக்க தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இரண்டு கட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது, இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனா குறித்த மிதமான அறிகுறி உள்ளவர்களுக்கு மூன்று நாட்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரியாத பட்சத்தில் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம். வீடு திரும்பிய நபர்கள் ஏழு நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு பிசிஆர் சோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் மிதமான பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் குறைவதோடு பாதிப்பு எண்ணிக்கையும் குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments