Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி; வட்டார மையங்கள் அமைக்க உத்தரவு! – செயலில் இறங்கும் மத்திய அரசு!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (08:45 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்க உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரசால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மூன்று விதமான கொரோனா தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கூடிய விரைவில் அவற்றை மக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நிபந்தனைகள் முன்பதிவு முறை குறித்து முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த மத்திய அரசு தற்போது மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த வட்டார அளவிலான தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வட்டாரங்களுக்கான தடுப்பூசிகளை சேமித்து வைக்கவும், பாதுகாக்கவும் மையங்கள் அமைக்கவும், அவற்றின் தரத்தை சோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments