உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உளவாளிகள்! – பிக்பாஸ் ஜின்பிங்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (08:26 IST)
அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதி வரும் சீனா உலக நாடுகள் பலவற்றில் உளவாளிகளை வைத்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் நடவடிக்கைகள் உலகளாவிய அரசியலில் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. தன்னிச்சையாக முடிவெடுத்தல், எல்லை நாடுகளுடன் பிரச்சினை என நாளுக்கு நாள் சீனா பிற நாடுகளுக்கு தலைவலி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங் விசுவாசிகளான சீன கம்யூனிஸ்டுகள் சுமார் 20 லட்சம் பேர் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சில மாதங்கள் முன்னரே மெயில் ஆன் சண்டே, ஸ்வீடிஷ் எடிட்டர் போன்ற பிற நாட்டு செய்தித்தாள்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இப்படியாக பல நிறுவனங்களில் தனது ஆட்களை வைத்து உலக பொருளாதாரத்தை சீனா கட்டுப்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும், கொரோனா வைரஸ் மற்றும் எல்லை அரசியல் ரீதியாகவும் அமெரிக்கா – சீனா இடையே மோதல் உள்ள நிலையில் இந்த செய்திகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments