Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி வரைவு திட்டம் தாக்கல் : வாரியமா? குழுவா? ஆணையமா?

Webdunia
திங்கள், 14 மே 2018 (12:08 IST)
கர்நாடக தேர்தல் முடிந்த நிலையில், காவிரி விவகாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

 
கர்நாடக தேர்தல் காரணமாக ஒருசில காரணங்களை கூறி நாட்களை கடத்தி வந்த மத்திய அரசு, தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் இன்று செயல் திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சீலிட்ட உறையில் காவிரி வரைவு திட்டத்தை யு.பி.சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
மத்திய அரசு தற்போது ஏற்படுத்தியுள்ள அமைப்பு காவிரி வாரியமா? குழுவா அல்லது ஆணையமா என்பது பற்றி தகவல் இல்லை. ஆனால், அந்த குழுவில் 10 பேர் இடம் பெறுவார்கள் எனவும், மத்திய நீர்வளத்துறை செயலாளரும் இடம் பெறுவார் என யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 
 
அந்த வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து தனது தீர்ப்பை அளிக்கும் எனத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கை வருகிற மே 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments