Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களில் புகைப்பிடித்தால், பிச்சையெடுத்தால் வழக்கு கிடையாது! – விதியில் புதிய மாற்றம்?

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (13:57 IST)
ரயில்களில் புகைப்பிடிப்பது மற்றும் பிச்சையெடுப்பது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றம் என்ற பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வேயில் ரயில்களில் பிச்சை எடுப்பது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை வழக்கு பதியும் வகையிலான குற்றமாக உள்ளது. ரயில்களில் பிச்சை எடுத்தால் இரண்டாயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை, அதேபோல புகைப்பிடித்தாலும் அபராதம் அல்லது சிறை தண்டனை உண்டு.

இந்நிலையில் ரயில்களில் பிச்சையெடுத்தல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் மட்டும் வசூல் செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதன்மூலம் பிச்சையெடுப்பதையோ, புகைப்பிடிப்பதையோ அரசு ஊக்குவிக்கவில்லை என்றும், வழக்குப்பதியும் அளவிலான குற்றமாக அதை கருதாமல் அபராதம் விதிக்கும் வகையிலான குற்றமாக மாற்ற மட்டுமே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments