Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அவசியமில்லை! – மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (08:32 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை. 6 முதல் 11 வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகள் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம்.

குழந்தைகளுக்கு நோய்தொற்றின் சந்தேகம் இல்லாவிட்டால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரத்தம் உறைதல் அபாயத்தை கண்காணிக்க வேண்டும்.

ஸ்டீராய்டு மருந்துகளை சரியான நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். றிகுறியற்ற அல்லது லேசான தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, பொருத்தமான தடுப்பூசி (தகுதி இருந்தால்), ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றை பெற வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments