Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (18:57 IST)
கொரோனா கிருமித்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட மொத்தம் 14 மாநிலங்களுக்கும் மத்திய நிதியமைச்சகம் தற்போது நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு மொத்தம் 6,195.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 
 
இதில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.2000 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கேரளாவிற்கு மத்திய அரசு ரூ.1276.91 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும், ஆந்திராவிற்கு மத்திய அரசு  ரூ.491.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும், திரிபுராவிற்கு மத்திய அரசு ரூ.423 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும், மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 417.75 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு 638.25 கோடியும், நாகலாந்து மாநிலத்திற்கு 326.41 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு 118.50 கோடியும், மேகாலாயாவுக்கு 40.91 கோடியும் மணிப்பூருக்கு 235.33 கோடிய்ம் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments