Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் வருகிறது 5ஜி தொழில்நுட்பம்! – ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை!

5g
, புதன், 15 ஜூன் 2022 (13:03 IST)
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த அலைக்கற்றை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன.

இப்போதே ஆன்லைன் சந்தைகளில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றையின் வேகமானது 4ஜியை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும் என்பதால் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாவதில் பலரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: முடிவுகள் எப்போது?