Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (10:50 IST)
இந்தியாவின் ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக, பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த 11% வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த வரி விலக்கு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை, 42 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகளால் இந்திய ஜவுளி துறைக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மத்திய அரசின் இந்த முடிவு, நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமையும். குறிப்பாக, பருத்தி நூற்பாலைகள், துணி உற்பத்தியாளர்கள், ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பெரும் உதவியாக இருக்கும். இந்த வரி விலக்கு, ஜவுளி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலையைக் குறைத்து, இந்திய ஜவுளிப் பொருட்களின் சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கும்.  
 
மத்திய அரசின் இந்த முடிவை இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு  வரவேற்றுள்ளது.  இந்த தற்காலிக வரி விலக்கு, குறுகிய காலத்தில் துறைக்கு ஒரு ஆதரவை வழங்கினாலும், நீண்டகாலத்திற்கு இந்த வரி விலக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜவுளித் துறையினரிடையே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.320 குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000க்கும் கீழ்.. மக்கள் மகிழ்ச்சி..!

அதிமுக கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் வருகிறது: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அதானி நிறுவனத்திற்கு 8 கோடி சதுர அடி நிலம் வழங்கிய அரசு: நீதிமன்றம் கண்டனம்..!

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments