Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு - விவசாயிகள்: துவங்கியது 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (15:46 IST)
டெல்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 10வது நாளாகப் போராடி வருகின்றனர்.  
 
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்றேனும் இதற்கு சுமுக தீர்வு கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் போராட்டத்தை இன்னும் தீவிரப்பட்டுத்த இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments