Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிவுக்கு வருமா டெல்லி போராட்டம்? – விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

முடிவுக்கு வருமா டெல்லி போராட்டம்? – விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (08:31 IST)
மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று விவசாய சங்கத்தினரோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்கள் விடாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் எதிர்வரும் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் 3 மணியளவில் விக்யான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமர் விவசாய சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்கள் விவசாய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தும் எனவும், ஆனால் மத்திய அரசின் சார்பில் விவசாயிகளை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!