Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் தொகை பதிவேடு: தவறான தகவல் அளித்தால் அபராதம்! – மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:36 IST)
மக்கள் தொகை பதிவேட்டு படிவத்தில் தவறான தகவல்களை நிரப்பினால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவது தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கு எடுக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டபோதே பரவலான சர்ச்சைகள் எழுந்தன. தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும், மக்கள் தொகை பதிவேட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கூறி விளக்கமளித்தது மத்திய அரசு.

மத்திய அரசு இந்த பதிவேடு கணக்கெடுப்பை ஏப்ரல் 1 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை நடத்தும் என கூறப்படுகிறது. மக்களிடையே எதிர்ப்புகள் இந்த கணக்கெடுப்புக்கு நிலவி வரும் சூழலில் யாராவது தவறான தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பின் போது எந்த ஆவணங்களையும் காட்ட தேவையில்லை என்றும் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எண்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments