Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு விமான சேவை தடை! ஜூலை 31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (13:13 IST)
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவைகள் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் உலக நாடுகள் பலவும் இந்தியாவுடனான விமான சேவைகளை தடை செய்து அறிவித்திருந்தன.

ஜூன் 30 (இன்று) வரை சர்வதேச விமான சேவைகள் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் சிறப்பு விமானங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments