Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தி பரப்புனா மட்டும்தான் கைது; கிண்டல் பண்ணுனா பிரச்சினை இல்ல! – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (11:11 IST)
கொரோனா பற்றிய வதந்திகள் மற்றும் கிண்டல் பதிவுகளை இடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில சுகாதார அமைச்சகங்கள் விளக்கங்கள் அளித்து வருகின்றன.

ஆனாலும் சமூக வலைதளங்களில் கொரோனா மருந்து போன்ற போலியான செய்திகள், வதந்திகள் வீடியோக்களாகவும் வேகமாக பரவி வருகின்றன. நிரூபிக்கப்படாத போலி தகவல்களை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் கொரோனாவை கேலியாக சித்தரித்து கார்ட்டூன் வரைதல், கிண்டல் பதிவுகளை இடுதல் போன்றவற்றை செய்தாலும் கைது நடவடிக்கை என சமூக வலைதளங்களில் திடீர் செய்தி பரவியது. ஆனால் போலி தகவல்களை பரப்புதலுக்கு மட்டுமே கைது, கிண்டல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கவில்லை என மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments