Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 4ஜி போன்கள் தயாரிக்க தடையா? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:11 IST)
சமீபத்தில் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் 4ஜி போன்கள் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் இதற்கான 4ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் 4ஜியை விட அதிகமான இணைய வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 5ஜி சேவைகளை தொடங்கி வைத்த நிலையில் தீபாவளி முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதற்கேற்ப 5ஜி ஸ்மாட்போன்களும் சந்தையில் நிறைய அறிமுகமாகி வருகிறது.

இந்நிலையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால் 3ஜி, 4ஜி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு 5ஜி சேவைகளால் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையானவை அல்ல என உறுதி செய்துள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம்.. பெற்றோர் கடத்த முயன்றதாக புகார்..!

வரியை குறைக்கிறோம்.. ஆனால் இந்தியா இதை செய்ய வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை..!

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments