ஒரு வெங்காயம் கூட வெளியே போகக்கூடாது! – தடை விதித்தது மத்திய அரசு

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (14:41 IST)
இந்தியாவில் வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக வெங்காயம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கிலோ 45 வரை விற்று வந்த வெங்காயம் ஒரே நாளில் கிலோ 60 ரூபாயாக விலை உயர்ந்தது.

நாட்டில் வெங்காயத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கையிறுப்பில் உள்ள வெங்காயங்களை பல வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் வெங்காய தட்டுபாடு அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதனால் வெங்காயம் தட்டுபாடு தீரும் வரை வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments