Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வெங்காயம் கூட வெளியே போகக்கூடாது! – தடை விதித்தது மத்திய அரசு

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (14:41 IST)
இந்தியாவில் வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக வெங்காயம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கிலோ 45 வரை விற்று வந்த வெங்காயம் ஒரே நாளில் கிலோ 60 ரூபாயாக விலை உயர்ந்தது.

நாட்டில் வெங்காயத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கையிறுப்பில் உள்ள வெங்காயங்களை பல வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் வெங்காய தட்டுபாடு அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதனால் வெங்காயம் தட்டுபாடு தீரும் வரை வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments