Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் யூட்யூப் சேனல்கள்! – தடை செய்த மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:43 IST)
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கும் விதமாக செயல்பட்ட யூட்யூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு யூட்யூப் சேனல்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் இந்திய இறையாண்மை மற்றும் சமூக அமைதியை குலைக்கும் விதமான கருத்துகளை வெளியிடும் சேனல்களை கண்டறிந்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 35 யூட்யூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது. மேலும் உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டிற்கு எதிராக போலி கருத்துகள், வெறுப்பு பேச்சுகளை வெளியிட்ட சமூக வலைதள கணக்குகள், இணைய செய்தி தளங்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு குறித்த தவறான தகவல்களை பரப்பி வந்த 22 யூட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் 18 சேனல்கள் இந்தியாவில் இருந்தும், 4 சேனல்கள் பாகிஸ்தானில் இருந்தும் இயங்கி வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments