Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன், உயிர் காக்கும் கருவி தயாரா இருக்கட்டும்! – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (11:05 IST)
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகளை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக குறைந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு புதிய வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா மருத்து உள்கட்டமைப்பை தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ தரத்திலான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments