Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் !

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் !
, சனி, 16 மே 2020 (20:56 IST)
கொரோனா வைரஸ் எதிரொலியால் 1 முதல் 8 வரை தேர்வுகள் ரத்தா ?

தமிழகம்  முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட சூழலில் ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது ஜூலை மாதம் நடத்தப்படும் என கூறப்பட்ட சிபிஎஸ்இ, 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடப்பட உள்ளது. ஆம், சிபிஎஸ்இ, 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக  மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை அறிவிக்கப்படுவதாக இருந்த சிபிஎஸ்சி10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று ஒரே நாளில் 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !