வெளிநாடு தப்பிச்செல்ல சிவசங்கர் பாபா திட்டமா? லுக்-அவுட் நோட்டீஸ் தர சிபிசிஐடி முடிவு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (07:59 IST)
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பி செல்ல முடியாத வகையில் லூகவுட் நோட்டீஸ் வழங்க சிபிசிஐட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி தனிப்படை குழுவினர் விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அங்கு அவருடன் விசாரணை செய்துவிட்டு பின்னர் அவரை கைது செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்