மீண்டும் தாமதமாகும் காவிரி செயல்திட்டம்?

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (18:14 IST)
மோடியின் வெளிநாட்டு பயணத்தால், ஜூன் முதல் தேதிக்கு முன்பாக அமலுக்கு வரவிருந்த காவிரி செயல்திட்டம் மீண்டும் தாமதமாகும் என தெரிகிறது.  
 
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 
 
இந்த செயல்திட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. 
 
அனால், தற்போது வரை காவிரி செயல்திட்டமானது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அதாவது, இன்று வரை காவிரி செயல்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த வாரம் அமைச்சரவை கூடும் போது இந்த வரைவு செயல்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், மோடியின் வெளிநாட்டு சுற்றுபயணத்தால் ஒப்புதல் கிடைக்காது என்பது தெளிவாக தெரிகிறது. 
 
இதுகுறித்து மத்திய நீர் வளத்துறை செயலாளர் கூறியதாவது,  புதன்கிழமை அமைச்சரவை கூடாவிட்டாலும் வேறு எந்த வகையிலாவது ஒப்புதல் பெறப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments