Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வருடத்தில் 19 நாட்கள் மட்டும் நாடாளுமன்றத்தில்... மோடியின் 4 ஆண்டு ஆட்சி சாதனை!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (13:20 IST)
இந்திய பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இது வரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், இதுவரை அவர் மொத்தம் 19 முறை மட்டுமே நாடளுமன்றத்திற்கு வந்துள்ளாராம்.
 
இதனால் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். 
 
நாடாளுமன்றத்திற்கு வந்த இந்த நாட்களிலும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். 
 
புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார். மக்களின் முக்கியமான பிரச்சனைகளை குறித்து அவர் பெரிதாக எதும் பேசவே இல்லை. 
 
பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார், அவர் நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் அதிக நாட்களை கழித்துள்ளார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. 
 
மேலும், பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

பாஜக தமிழக துணை தலைவராக குஷ்பு நியமனம்.. முதல் அழைப்பே விஜய்க்கு தான்..!

உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய ரத்தம்.. இந்திய பெண்ணுக்கு செய்த சோதனையில் ஆச்சரியம்..!

நெல்லையில் ஆணவ கொலை.. கைதான சுர்ஜித்தின் தந்தையும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments