Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வருடத்தில் 19 நாட்கள் மட்டும் நாடாளுமன்றத்தில்... மோடியின் 4 ஆண்டு ஆட்சி சாதனை!

மோடி
Webdunia
புதன், 13 ஜூன் 2018 (13:20 IST)
இந்திய பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இது வரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், இதுவரை அவர் மொத்தம் 19 முறை மட்டுமே நாடளுமன்றத்திற்கு வந்துள்ளாராம்.
 
இதனால் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். 
 
நாடாளுமன்றத்திற்கு வந்த இந்த நாட்களிலும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். 
 
புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார். மக்களின் முக்கியமான பிரச்சனைகளை குறித்து அவர் பெரிதாக எதும் பேசவே இல்லை. 
 
பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார், அவர் நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் அதிக நாட்களை கழித்துள்ளார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. 
 
மேலும், பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments