Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்மூடித்தனமாக கூகுள் மேப்பை நம்பி... பள்ளத்தில் விழுந்த நண்பர்கள்!

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (15:38 IST)
கூகுள் மேப் காட்டும் வழியை பின்பற்றி வந்த போது எதிர்பாராத விதமாக 30 அடி ஆழ பள்ளத்தில் காரை விட்டு விபத்துகுள்ளாக்கி தண்ணீரில் தத்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
3 இளைஞர்கள் திருச்சூரில் இருந்து மூணாறு புறப்பட்டனர். மூணாறுக்கு செல்ல வழி தெரியததால் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலின்படி சென்றுள்ளனர். இரவு நேரம் என்பதால் சாரை சற்று வேகமாக இயக்கியுள்ளனர். 
 
அப்போது பாலமட்டம் - அவழிச்சல் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் பெரும் பள்ளம் இருப்பதை கண்டு காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கட்டுப்பாட்டை மீறி கார் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
அந்த பள்ளத்தில் 8 அடி அளவிற்கு தண்ணீரும் இருந்துள்ளது. இதனால் மூவரும் காரின் மேற்பகுதியை பிடித்தபடி உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளனர். நல்லவேளையாக அந்த வழியாக வந்த ரப்பர் தோட்ட தொழிலாளிகள் கூச்சல் சத்தம் கேட்டு அவர்களை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
திருச்சூர் - மூணாறு செல்ல கூகுள் மேப்பில் வழி தேடினால் இந்த பாதைதான் வருகிறது. ஆனால் இங்கு 30 அடி ஆழ பள்ளம் இருப்பது உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments