Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்மூடித்தனமாக கூகுள் மேப்பை நம்பி... பள்ளத்தில் விழுந்த நண்பர்கள்!

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (15:38 IST)
கூகுள் மேப் காட்டும் வழியை பின்பற்றி வந்த போது எதிர்பாராத விதமாக 30 அடி ஆழ பள்ளத்தில் காரை விட்டு விபத்துகுள்ளாக்கி தண்ணீரில் தத்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
3 இளைஞர்கள் திருச்சூரில் இருந்து மூணாறு புறப்பட்டனர். மூணாறுக்கு செல்ல வழி தெரியததால் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலின்படி சென்றுள்ளனர். இரவு நேரம் என்பதால் சாரை சற்று வேகமாக இயக்கியுள்ளனர். 
 
அப்போது பாலமட்டம் - அவழிச்சல் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் பெரும் பள்ளம் இருப்பதை கண்டு காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கட்டுப்பாட்டை மீறி கார் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
அந்த பள்ளத்தில் 8 அடி அளவிற்கு தண்ணீரும் இருந்துள்ளது. இதனால் மூவரும் காரின் மேற்பகுதியை பிடித்தபடி உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளனர். நல்லவேளையாக அந்த வழியாக வந்த ரப்பர் தோட்ட தொழிலாளிகள் கூச்சல் சத்தம் கேட்டு அவர்களை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
திருச்சூர் - மூணாறு செல்ல கூகுள் மேப்பில் வழி தேடினால் இந்த பாதைதான் வருகிறது. ஆனால் இங்கு 30 அடி ஆழ பள்ளம் இருப்பது உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments