Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையை கடக்கும் மாணவர்களின் நிலை இதுதான் ... ராகுல் பகிர்ந்த வீடியோ!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (14:06 IST)
ராகுல் காந்தி சில மாணவர்கள் எல்லையை கடக்க முயன்றபோது இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உக்ரைனில் சிக்கித் தவித்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் அவசரமாக வெளியேற்றும் திட்டத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அதோடு சில மாணவர்கள் எல்லையை கடக்க முயன்றபோது இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
 
இதுபோன்ற வன்முறையால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது என் இதயம் துடிக்கிறது. எந்தப் பெற்றோரும் இதைப் பார்க்கக்கூடாது, என்று அவர் ட்விட்டரில் சில மாணவர்களின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments