Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் லேட்டா வந்துச்சு மிஸ்.. மாணவனுக்காக போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (11:49 IST)
ஒடிசாவில் பள்ளிக்கு செல்லும் அரசு பேருந்து தாமதமாக கிளம்புவது குறித்து மாணவன் ட்விட்டரில் அளித்த புகாரை ஏற்று பேருந்து நேரத்தை போக்குவரத்து கழகம் மாற்றியமைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் நகரத்தில் வாழ்ந்து வருபவர் சாய் அன்வேஷ். அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் அன்வேஷ் தினமும் பள்ளி சென்று வர அரசு பேருந்தையே நம்பி வந்துள்ளார். இந்நிலையில் அவரது பள்ளிக்கு செல்லும் வழியில் செயல்படும் பேருந்து சேவை காலதாமதமாக தொடங்குவதால் பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் அன்வேஷ்.

இந்நிலையில் இதுகுறித்து புவனேஷ்வர் மாநகர போக்குவரத்து கழகத்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டு மாணவர் அன்வேஷ் தனது பிரச்சினைகளை அதில் முறையிட்டுள்ளார்,. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள போக்குவரத்து கழகம் மாணவர் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்லும் வகையில் பேருந்தின் புறப்படும் நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments