Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாசாயிகள் பெயரில் ரூ.5,400 கோடி கடன்: வங்கிகளை ஏமாற்றிய பலே தொழிலதிபர்!

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (16:14 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் போலி ஆவணங்களை தயார் செய்து விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.5,700 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
மகாராஷ்டிர மாநிலம் பார்பானி மாவட்டத்தில் காங்கேட் சர்க்கரை மற்றும் எரிசக்தி லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருபவர் ரத்னாகர் கட்டே. அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இவரது சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்துள்ளனர். 
 
இந்நிலையில் இவரது நிறுவனத்திற்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் பலருக்கு வங்கிகளில் இருந்து கடனை வட்டித்தொகையுன் திருப்பிசெலுத்தும்படி நோட்டீஸ் வந்துள்ளது. 
 
இதை பார்த்து வங்கிக்கு சென்று விசாரணை செய்ததில் சுமார் 600 விவசாயிகள் பெயரில் பயிர் அறுவடை மற்றும் போக்குவரத்து திட்டம் என்ற பெயரில் ரத்னாகரின் நிறுவனம் கடன் வாங்கியுள்ளது தெரியவந்தது. 
 
மேலும், விவசாயிகள் பெயரில் போலியாக கடன் பெறுவதற்காக 22 போலி நிறுவனங்களையும் இவர் நடத்தி வந்துள்ளார். எனவே, இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments