Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்டில் பள்ளதாக்கில் கவிழ்ந்த பேருந்து:6 பேர் பலி

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (12:28 IST)
ஜார்கண்ட் மாநிலம், கர்வா பகுதியில் பயணித்து கொண்டிருந்த பேருந்து ஆழமான பள்ளதாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சட்டீஸ்கரிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் கர்வா பகுதிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி பள்ளதாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜார்கண்டின் கர்வா பகுதிக்கு அருகே நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த விபத்தை குறித்து ஜார்கெண்ட் மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments