Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்டில் பள்ளதாக்கில் கவிழ்ந்த பேருந்து:6 பேர் பலி

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (12:28 IST)
ஜார்கண்ட் மாநிலம், கர்வா பகுதியில் பயணித்து கொண்டிருந்த பேருந்து ஆழமான பள்ளதாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சட்டீஸ்கரிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் கர்வா பகுதிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி பள்ளதாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜார்கண்டின் கர்வா பகுதிக்கு அருகே நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த விபத்தை குறித்து ஜார்கெண்ட் மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments