Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

Mahendran
வியாழன், 28 நவம்பர் 2024 (11:34 IST)
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதிக சந்தாதாரர்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் கடன்களும் குறைந்து வருவதாகவும் வருவாய் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திடீரென கட்டணத்தை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் சேவைக்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு அதிரடி சலுகை திட்டங்களை வெளியிட்டு வருகின்றது. 
 
இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடந்த 2022ஆம் ஆண்டு 40 ஆயிரத்து 400 கோடி கடன் இருந்த நிலையில் தற்போது அது 23 ஆயிரத்து 297 கோடியாக குறைந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வருமானம் அதிகரித்து வருவதாகவும் இதனால் கடன் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது 4ஜி சேவைகளை அளித்து வரும் பிஎஸ்என்எல் 5G சேவைகளை ஆரம்பித்தால் கடன்கள் முழுவதுமாக தீர்க்கப்பட்டு லாபத்தில் செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments