தனது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காதலனின் தாயை இளம்பெண் கொளுத்திய சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாஜ்ஜார் பகுதியைச் சேர்ந்த சுனிதாவுக்கு நண்பர் ஒருவர் மூலம் சத்யவானின் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகம் காதலாக மாறியுள்ளது.
இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சத்யவானின் தாய் சரோஜ், தனது மகனை அல்கா எனும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இது குறித்து உறவினர் மூலம் தெரிந்துக் கொண்ட சுனிதா, சரோஜ் மற்றும் சத்யவானை பழிவாங்க காத்திருந்தார். அப்போது ஒரு கடையில் சரோஜை பார்த்த சுனிதா அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சரோஜ் படுகாயம் அடைந்தார், சுமிதாவுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
இதனால், சுமிதா கைது செய்யப்பட்டார். சரோஜின் உடல் பிரதே பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.