Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்றோர்கள் உல்லாசமாக இருப்பதை பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன்!

பெற்றோர்கள் உல்லாசமாக இருப்பதை பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன்!

பெற்றோர்கள் உல்லாசமாக இருப்பதை பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன்!
, சனி, 27 மே 2017 (11:50 IST)
பெங்களூரில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோர்கள் உல்லாசமாக இருப்பதை படம் எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் தங்கள் 13 வயது மகனுக்கு விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்றை வாங்கி கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் மகனை கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் அந்த சிறுவன் மொபைல் போனுக்கு அடிமையாகி பேஸ்புக் கணக்கு ஒன்றை துவங்கி அதில் அடையாளம் தெரியாத பலருடன் பேசி வந்துள்ளான்.
 
இதில் தேஜல் படேல் என்ற நபருடன் அந்த சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருடன் அதிகமாக சாட்டிங் செய்து வந்துள்ளான் சிறுவன். இந்நிலையில் சமீபத்தில் சிறுவனுக்கு பேஸ்புக்கில் ஆபாச படம் ஒன்றை அனுப்பி உள்ளார் தேஜல் படேல்.
 
மேலும் அதே போன்ற ஆபாச படங்களை நீயும் எனக்கு அனுப்பு என சிறுவனிடம் கூறியுள்ளார் தேஜல் படேல். இதனையடுத்து அந்த சிறுவன் தனது பெற்றோர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சியை ரகசியமாக புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக்கில் அந்த நபருக்கு அனுப்பியுள்ளான். மேலும் அது தனது பெற்றோர்களுடையது தான் எனவும் கூறியுள்ளான்.
 
இதனையடுத்து தேஜல் படேல் சிறுவனின் பெற்றோரை தொடர்புகொண்டு உங்களது ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது, நீங்கள் எனக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் அதனை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான். மேலும் இந்த படங்களை அனுப்பியது உங்கள் மகன் தன் எனவும் கூறியுள்ளான்.
 
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்கள் மகனின் மொபைலை வாங்கி பார்த்தபோது அதில் தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அந்த நபருக்கு மகன் அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெங்களூரு சைபர் க்ரைமில் பெற்றோர்கள் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை மாதம் அரசியலில் இறங்கும் ரஜினி ; உறுதி செய்த சத்யநாரயணா