புதுச்சேரி பாவணன் நகர் பகுதியை சேர்ந்த 10 வயது  சிறுவன் சாலையில் விழுந்ததில், பேருந்தின் சக்கரத்தின் சிக்கி தந்தை கண் முன்னே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	புதுச்சேரியூனியலில் பாவணன் பகுதியில் வசித்து வருபவர் பன்னீர் செல்வம்.  அவரது மகன் கிஷ்வந்தை பள்ளிக்குத் தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்த்திசையில் ஒரு பைக் வந்துள்ளது. அப்போடு, பன்னீர் தனது பைக்கின் வேகத்தைக் குறைத்துள்ளார். ஆனால், இருவரும் நேருக்கு நேர் மோதி, கீழே விழுந்தனர். அந்த வழியில் வந்த தனியார் பேருந்து சககரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் கிஷ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்