Publish Date: Sat, 18 Mar 2017 (13:50 IST)
Updated Date: Sat, 18 Mar 2017 (13:59 IST)
ஆக்ராவில் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே அடுத்தடுத்து இரண்டு குண்டிவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மீது தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் பயங்கரவாதிகள் நேற்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு சம்ப்வம் நிகழ்ந்துள்ளது.
இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் எச்சரிக்கை அடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.