Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு சுடுகாட்டில் டோக்கன்: பிணங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:40 IST)
பெங்களூரு சுடுகாட்டில் டோக்கன்: பிணங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பலியாகும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் பெங்களூரில் கொரோனாவால் பலியானவர்களை தகனம் செய்ய சுடுகாடுகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரே நாளில் பல சடலங்கள் குவிந்துள்ளதால் தற்போது அங்கு டோக்கன் முறையில் உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
அதேபோல் பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை முழுதும் நிரம்பி விட்டது என்றும் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments