Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக படகு உரிமையாளர் கைது!

Webdunia
திங்கள், 8 மே 2023 (19:30 IST)
கேரளா மாநிலம் மலப்புரம் அடுத்துள்ள தானூர் அருகேயுள்ள ஆற்றில்  நேற்று 40 பேருடன் சென்ற படகு விபத்திற்குள்ளான விவகாரத்தில் படகு உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் அடுத்துள்ள தானூர் அருகேயுள்ள ஆற்றில்  நேற்று 40 பேருடன் சென்ற படகு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் படகில் 25 பேர்தான் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், 40 பேர் வரை சென்றதால், விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியானது.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படகு விபத்து தொடர்பாக படகு  உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலோர பகுதியான தனூர் என்ற பகுதியில்  படகின் உரிமையாளர்   நாசர் இருந்த நிலையில், போலீஸார் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments